தர்மபுரி ராகவேந்திர சாமி கோவிலில்திருவிளக்கு பூஜை

Update: 2023-02-11 19:00 GMT

தர்மபுரி மாவட்ட ஆயிர வைசியர் மகளிர் சங்கம் சார்பில் உலக அமைதிக்காகவும், அனைத்து மக்களின் நலனுக்காகவும் 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை தர்மபுரி விருபாட்சிபுரத்தில் உள்ள ராகவேந்திர சாமி கோவிலில் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். பூஜையையொட்டி ராகவேந்திர சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு உபகார பூஜைகளும், மகா தீபாராதனையும் நடந்தது.

திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள், குங்குமம். மாங்கல்ய கயிறு, வளையல் உள்ளிட்ட பொருட்களும், பிரசாதமும் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆயிர வைசியர் சங்க நிர்வாகிகள் மற்றும் மகளிர் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்