கடையநல்லூர் பகுதியில் 3-ந் தேதி மின்தடை

கடையநல்லூர் பகுதியில் 3-ந் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-10-31 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 3-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், போகநல்லூர், மங்களாபுரம், இடைகால், நயினாரகரம், போகநல்லூர், தார்காடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை கடையநல்லூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பிரேமலதா தெரிவித்து உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்