மதகுபட்டி பகுதியில் நாளை மின்தடை
மதகுபட்டி பகுதிகளில் நாளை மின் வினியோகம் இருக்காது;
சிவகங்கையை அடுத்த மதுகுபட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆதலால் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மதகுபட்டி, தச்சம்பட்டி, ராமலிங்கபுரம், காடனேரி, அம்மன்பட்டி, ஒக்கூர், காளையார்மங்கலம், அய்யம்பட்டி, கொழுக்கட்டைப்பட்டி, அண்ணாநகர், புதூர், நாலுகோட்டை, கருங்காப்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்தார்.