நாளை மின்சாரம் நிறுத்தம்
மேகமலை, சுருளிப்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.;
கூடலூர் அருகே உள்ள வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி ஆங்கூர்பாளையம், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, லோயர்கேம்ப், மணலாறு, ஹைவேவிஸ், மேகமலை, இரவங்கலாறு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை சின்னமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.