மேட்டுநீரேத்தான், தேவசேரி பகுதியில் நாளை மின்தடை

பராமரிப்பு பணிக்காக மேட்டுநீரேத்தான், தேவசேரி பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.

Update: 2023-04-30 18:57 GMT

வாடிப்பட்டி

சமயநல்லூர் மின் கோட்டத்திற்குட்பட்ட வாடிப்பட்டி துணை மின் நிலையத்தில் ராயபுரம் பீடர் மற்றும் மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் தேவசேரி மற்றும் சேந்தமங்கலம் பீடர்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே மோகன் பிளாட், திருமால்நத்தம், ரிஷபம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம் ஆண்டிபட்டி பங்களா ஆகிய பகுதிகளிலும், குறவன்குளம், முடுவார்பட்டி, தேவசேரி, ஆதனூர், பண்ணைகுடி, மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைபட்டி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிபட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவார்பட்டி ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இந்த தகவலை சமயநல்லூர் மின் பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்