செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவன நாத சுவாமி கோவிலில் நேற்று பிரதோஷ விழாவையொட்டி மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பூவனநாதர், நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி தலைமையில் கோவில் ஊழியர்கள் பிரசாதம் வழங்கினார்கள்.