எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள பழமையான கமலாம்பிகை சமேத கைலாசநாதர் கோவிலில் சித்திரை மாத திங்கட்கிழமை சோமவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக, தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர்கள் ரிஷப வாகனத்தில் உள் மண்டப பிரகாரத்தில் வலம் வந்தனர். இதேபோல் உலகம்பட்டியில் உள்ள உலகநாயகி சமேத உலகநாத சாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. மேலும் சாமிகள் ரிஷப வாகனத்தில் உள்மண்டப பிரகாரத்தில் எழுந்தருளினர். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.