தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடு விலை உயர்வு

தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடு விலை உயர்ந்துள்ளது.

Update: 2022-09-22 19:00 GMT

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் 2,169 கிலோ பட்டுக்கூடுகள் நேற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று முன்தினம் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.751-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.54 விலை அதிகரித்தது. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.805- க்கும், குறைந்தபட்சமாக ரூ.525-க்கும், சராசரியாக ரூ.695.94-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.15 லட்சத்து 9ஆயிரத்து 975 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்