கவர்னரின் செயல்பாடுகளை கண்டித்துஅரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கவர்னரின் செயல்பாடுகளை கண்டித்து அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

Update: 2023-01-11 18:45 GMT


தமிழக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த கவர்னரின் செயல்பாடுகளை கண்டித்து நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கத்தின் (சி.ஐ.டி.யு.) சார்பில் நேற்று விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. துணை பொதுச்செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரகோத்தமன் கண்டன உரையாற்றினார். இதில் மத்திய பணிமனை செயலாளர் சாதிக்பாஷா, ஓய்வுபெற்றோர் சங்க பொதுச்செயலாளர் சின்னராசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்