தர்மபுரியில் விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்

Update: 2023-01-25 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரியில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் இந்த ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா கொடியசைத்து தொடங்கி வைத்து, பங்கேற்றார். பைபாஸ் ரோடு வழியாக தர்மபுரி அரசு கலை கல்லூரி வரை ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சிலம்பாட்டம், ஓவியப்போட்டி, பாட்டுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனி தேவி, உதவி கலெக்டர் கீதா ராணி, அரசு கலை கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன், தாசில்தார் ராஜராஜன், தேர்தல் தாசில்தார் சவுகத்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்