நாமக்கல் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் மூலம் ரேஷன்கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் பெயர் திருத்தம், செல்போன் எண் பதிவு மற்றும் குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடந்தது.
இதில் ரேஷன்கார்டுகளில் பெயர் திருத்தம், செல்போன் எண் மாற்றம் உள்ளிட்ட 101 மனுக்கள் வந்ததாகவும், அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.