மண்டல அளவிலான செஸ் போட்டி

மண்டல அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.

Update: 2023-08-31 22:31 GMT

பெரம்பலூரில் மண்டல அளவிலான செஸ் போட்டி துறையூர் புறவழிச்சாலையில் உள்ள தனியார் பப்ளிக் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதனை பள்ளி தாளாளர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இதில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 8, 10, 12, 15, 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு திறமையுடன் காய்களை நகர்த்தி விளையாடினார்கள். போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்