இந்திய நாடார்கள் பேரமைப்பு மண்டல அலுவலகம் திறப்பு விழா

தென்காசி அருகே இந்திய நாடார்கள் பேரமைப்பு மண்டல அலுவலகம் திறப்பு விழா நடந்தது.

Update: 2022-05-22 15:29 GMT

தென்காசி:

தென்காசி அருகே மேலகரத்தில் இந்திய நாடார்கள் பேரமைப்பு மண்டல அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவன தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் நாடார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் அகரகட்டு லூர்து நாடார் முன்னிலை வகித்தார்.

நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். மாநில வக்கீல் அணி பொருளாளர் பால்ராஜ், வடக்கு மாவட்ட தலைவர் சூரியபிரகாஷ், மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட துணைத்தலைவர் கணேசன், நகர தலைவர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்