இறந்தவரின் உடலை வயல் வழியே சுடுகாட்டிற்கு தூக்கிச்செல்லும் உறவினர்கள்

இறந்தவரின் உடலை வயல் வழியே சுடுகாட்டிற்கு தூக்கிச்செல்லும் உறவினர்கள்

Update: 2023-08-18 20:23 GMT

ஒரத்தநாடு அருகே சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை வயல் வழியே சுடுகாட்டிற்கு அவரது உறவினர்கள் தூக்கிச்சென்றனர். எனவே சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வயல் வழியே தூக்கிச்செல்லும் அவலம்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த சின்னப்பொண்ணு என்பவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்தார். இதையடுத்து அவரது உடலை பாடை கட்டி சுடுகாட்டிற்கு நெற்பயிரிடப்பட்டுள்ள வயல் வழியே அவரது உறவினர்கள் தூக்கி சென்று தகனம் செய்தனர்.

சாலை வசதி வேண்டும்

இந்த பகுதியில் இறப்பு நேரிட்டால் சம்பந்தப்பட்ட சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லாததால், இறந்தவரின் உடலை வயல் வழியே தூக்கி சென்று அடக்கம் செய்து வருவதாகவும், எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்புடைய சுடுகாட்டிற்கு சாலை வசதி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்