நீர் நிலை புறம்போக்கு நிலத்தில் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வெள்ளூர் கோலக்காரன்பேட்டையில் நீர் நிலை புறம்போக்கு நிலத்தில் கோர்ட்டு உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Update: 2023-06-28 10:48 GMT

கண்ணமங்கலம்

வெள்ளூர் கோலக்காரன்பேட்டையில் நீர் நிலை புறம்போக்கு நிலத்தில் கோர்ட்டு உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

சந்தவாசல் அருகே உள்ள வெள்ளூர் கோலக்காரன்பேட்டை பகுதியில் ஓடைப்புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டு இருந்தது. இந்த 3 வீடுகள் போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி, போளூர் தாசில்தார் நரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில், கோர்ட்டு உத்தரவின் பேரில் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டது. அப்போது சந்தவாசல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்