குடியரசு தின விழா

தர்மபுரி மாவட்டம் பத்திரெட்டிஅள்ளி அரசு பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-01-28 18:45 GMT

தர்மபுரி மாவட்டம் பத்திரெட்டி அள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அங்கப்பன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலை வகித்தனர். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. விழாவில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதேபோல் பள்ளி மேலாண்மை குழு சார்பில் பள்ளிக்கு கண்காணிப்பு கேமரா வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவி காளியம்மாள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மகாலிங்கம், நிர்வாகிகள் பழனி, பழனிவேல் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் அருண்பிரசாத் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்