ஆட்டோ மோதி படுகாயமடைந்தவர் சாவு

பாபநாசம் அருகே ஆட்டோ மோதி படுகாயமடைந்தவர் உயிரிழந்தாா்.

Update: 2023-01-31 21:13 GMT

பாபநாசம்;

திருச்சி மாவட்டம், குறிச்சி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது43). சம்பவத்தன்று இவர் தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் பாபநாசம் தெற்கு வீதி, கடைவீதியில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த ஆட்டோ மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த மணிகண்டனை அக்கம்பக்கத்தினர் மீட்டு வாகனம் மூலம் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார். இது குறித்து பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்