தூக்கில் அழுகிய நிலையில் ஆண் பிணம்

விழுப்புரத்தில் தூக்கில் அழுகிய நிலையில் ஆண் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-25 18:45 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலையில் உள்ள ஒரு பழுதடைந்த கட்டிடத்தின் அருகில் இருந்த வேப்ப மரத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிணமாக கிடந்த அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்றும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் அவரை அடித்துக்கொலை செய்துவிட்டு உடலை தூக்கில் தொங்கவிட்டு சென்றனரா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்