எஸ்.புதூர் ஒன்றியக்குழு கூட்டம்

எஸ்.புதூர் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது

Update: 2023-07-14 18:45 GMT

எஸ்.புதூர்

எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் சாதாரண ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய சேர்மன் விஜயா குமரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்குமார், சத்யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மன்ற பொருளாக பொது செலவினம், வரவு, செலவுகள் என 38 தீர்மானங்கள் வைக்கப்பட்டது. இதனை கூட்டம் அங்கீகரித்தது.

பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தங்கள் துறையில் உள்ள அரசு சலுகைகள் குறித்து எடுத்துக்கூறினர். தொடர்ந்து துணை சேர்மன் வீரம்மாள் பழனிச்சாமி பேசுகையில், மழை காலம் தொடங்கும் முன்பாக சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்கவும், அரசு சார்பில் வரும் சலுகைகள், செயல்படுத்தும் முறைகள் குறித்தும் அரசு அதிகாரிகள் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் கோரிக்கை வைத்தார்.

இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் ரேவதி செல்வராஜ், விஜயா கருப்பையா, ராஜாத்தி சிங்காரம், இந்திராகாந்தி சத்தியமூர்த்தி, சின்னம்மாள் மென்னன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்