புனித வேளாங்கண்ணி மாதா ஆலய தேர் பவனி

புனித வேளாங்கண்ணி மாதா ஆலய தேர் பவனி நடந்தது.;

Update:2022-10-03 01:21 IST

தரகம்பட்டியில் உள்ள புனித வேளாங்கண்ணி மாத ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் தேர்பவனி கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையடுத்து புனித வேளாங்கண்ணி மாதா பூக்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு டிராக்டரில் ஏற்றப்பட்டு தேர்பவனி நடந்தது. தேர் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் ஆலயம் வந்தடைந்தது. பிறகு அன்னதானம் நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்