சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க கூட்டம்

பழனியில் சத்துணவு- அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க கூட்டம் நடந்தது.

Update: 2023-07-02 19:45 GMT

திண்டுக்கல் மாவட்ட சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் பழனியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வராஜ், துணைத்தலைவர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சத்துணவு-அங்கன்வாடி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.6750 வழங்க வேண்டும், ஓய்வுபெறும் நாளிலேயே பி.எப் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேற்கண்ட தீர்மானத்தை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 10-ந்தேதி திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்