தண்ணீர் சூழ்ந்ததால் பள்ளிக்கு விடுமுறை
தண்ணீர் சூழ்ந்ததால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
விக்கிரமங்கலம்:
அணைக்குடி கிராமத்தில் விளை நிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதோடு, வீடுகளுக்கு அருகிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் தொடக்கப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள கிராம மக்களை அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.