பள்ளி மாணவி மர்மச்சாவு

திமிரியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-05-25 18:25 GMT

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள திமிரி கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், கார் டிரைவர். இவரது மகள் பிரதிக் ஷா (வயது 10), அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தாள். ஏதாவது பூச்சி கடித்து இருக்கக்கூடும் என சந்தேகப்பட்ட அவரது பெற்றோர் உடனடியாக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். மாணவி எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்