பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

காவேரிப்பட்டணம் அருகே பெண்ணை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-06 18:45 GMT

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

தொழிலாளியுடன் தொடர்பு

காவேரிப்பட்டணம் அருகே உள்ள திம்மாபுரம் ராமநாதன் நகரை சேர்ந்தவர் யாஸ்மின் (வயது 29). இவர் மணிகண்டன் என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். குடும்ப பிரச்சினை காரணமாக அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர். யாஸ்மின் திம்மாபுரம் பகுதியில் உள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

அங்கு மலையாண்டஅள்ளி அருகே உள்ள மன்னன் நகரை சேர்ந்த கன்னியப்பன் (34) என்பவர் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். அப்போது இவருக்கும், யாஸ்மினுக்கும் தொடர்பு ஏற்பட்டது. கடந்த 4 மாதங்களாக யாஸ்மின் கன்னியப்பனுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். கடந்த 5-ந் தேதி தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வந்த யாஸ்மினுடன் கன்னியப்பன் தகராறு செய்தார்.

அரிவாள் வெட்டு

அப்போது அவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் யாஸ்மினை வெட்டினார். இதில் அவருக்கு கழுத்து மற்றும் கைகளில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில், காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து கன்னியப்பனை கைது செய்தார். அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்