பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

டால்பின் நோஸ் காட்சி முனையில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-04-22 18:45 GMT

குன்னூர்,

குன்னூர் தாசில்தார் சிவக்குமார் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் லலிதா, சுகந்தி, சிவராணி மற்றும் வருவாய்த்துறையினர் சுற்றுலா தலத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள 2 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து கடைக்காரர்களுக்கு ரூ.26 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்றதாக 2 குடோன்களை பூட்டி வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்