மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

Update: 2022-11-01 20:30 GMT

பேரையூர், 

பேரையூர் அருகே உள்ள மெய்யனுத்தம்பட்டி மொட்டமலை ஓடையில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக, வண்டாரி கிராம நிர்வாக அலுவலர் சங்கீதாவுக்கு கிடைத்த தகவலின் பேரில், சாப்டூர் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன், கிராம நிர்வாக அலுவலர், ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது, அங்கு அனுமதி இல்லாமல் டிராக்டர் ஒன்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்தவர்கள், போலீசாரை பார்த்தவுடன் அங்கேயே டிராக்டரை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மெய்யனுத்தம்பட்டியை சேர்ந்த தெய்வேந்திரன் என்பவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்