புகையிலை பொருட்கள் பறிமுதல்

பெரியகுளம் அருகே ஒரு கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-06-19 19:00 GMT

பெரியகுளம் தென்கரை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தீபக் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வடுகப்பட்டியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் திடீர் சோதனை செய்தனர். அங்கு அரசால் தடை செய்யப்பட்ட 12 புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகள் விற்பனைக்கு இருப்பதை கண்டுபிடித்தனர். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளர் முத்துக்கொடி (வயது 70) என்பவரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்