வெப்படை, உப்புபாளையம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்

Update: 2023-10-25 19:00 GMT

குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டம் உப்புபாளையம் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மோடமங்கலம், வால்ராஜபாளையம், அம்மன் கோவில், நவக்காடு, உப்புபாளையம், ஆத்திக்காட்டூர், நட்டுவம்பாளையம், ஆனங்கூர் ெரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதேபோல் வெப்படை துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வெப்படை, பாதரை, இந்திரா நகர், ரங்கனூர் 4 ரோடு, புதுப்பாளையம், இலந்தகுட்டை, தாண்டான் காடு, காந்தி நகர், சின்னார்பாளையம், இ.காட்டூர், புதுமண்டபத்தூர், தெற்கு பாளையம், மாதேஸ்வரன் கோவில், வெடியரசம்பாளையம், செம்பாறைக்காடு, சின்ன கவுண்டம்பாளையம், களியனூர், மாம்பாளையம், மோளக்கவுண்டம்பாளையம் மற்றும் இளையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை பள்ளிபாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் கோபால் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்