சாத்தூர், மார்ச்.17-
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் போதை பழக்கத்திற்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சாத்தூர் பஸ் நிலையத்தில் போதை பழக்கத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த கையெழுத்து இயக்கத்தை சாத்தூர் நகா்மன்ற துணைத்தலைவர் அசோக் தொடங்கி வைத்தார். இதில் சி.ஐ.டி.யு. சாலை போக்குவரத்து மாவட்ட தலைவர் விஜயகுமார், விவசாய சங்க தாலுகா தலைவர் சுப்பாராஜ்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.