கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு கையெழுத்து இயக்கம்

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் விசாகன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-02-09 19:00 GMT


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு கையெழுத்து இயக்கம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கையெழுத்திட்டனர்.


இதை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார். அதன்படி கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமர்நாத், தொழிலாளர் உதவி ஆணையர் சிவசிந்து, துணைஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




Tags:    

மேலும் செய்திகள்