தர்மபுரி:
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு நேற்று 2 ஆயிரத்து 356 கிலோ பட்டுக்கூடு கொண்டு வரப்பட்டது. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.538-க்கும், குறைந்தபட்சமாக ரூ.326-க்கும், சராசரியாக ரூ.450.25-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.10 லட்சத்து 61 ஆயிரத்துக்கு பட்டுக்கூடு வர்த்தகம் நடந்தது.