தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை கிலோவுக்கு ரூ.208 அதிகரிப்பு

Update:2023-05-27 00:15 IST

தர்மபுரி:

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1,501 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து, நேற்று 491 கிலோவாக குறைந்தது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக ஒரு கிலோ பட்டுக்கூடு ரூ.447-க்கு விற்பனையானது. நேற்று பட்டுக்கூடு விலை கிலோவிற்கு ரூ.208 அதிகரித்தது. அதன்படி ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.655-க்கும், குறைந்தபட்சமாக ரூ.267-க்கும், சராசரியாக ரூ.382.84-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்துக்கு பட்டுக்கூடு வர்த்தகம் நடந்தது.

மேலும் செய்திகள்