தர்மபுரி அங்காடிக்குபட்டுக்கூடு வரத்து குறைந்தது

Update:2023-08-30 01:00 IST

தர்மபுரி:

தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 2,555 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன. இந்த நிலையில் நேற்று பட்டுக்கூடுகள் வரத்து 2,440 கிலோவாக குறைந்தது. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.649-க்கும், குறைந்தபட்சமாக ரூ.210-க்கும், சராசரியாக ரூ.542.57-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.13 லட்சத்து 24 ஆயிரத்து 187-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

Tags:    

மேலும் செய்திகள்