ரூ.12¾ லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை

தர்மபுரி அங்காடியில் ரூ.12¾ லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை நடைபெற்றது.

Update: 2023-10-25 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று 2,900 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று 1 கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.541-க்கும், குறைந்தபட்சமாக ரூ.281-க்கும், சராசரியாக ரூ.439.03-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.12 லட்சத்து 73 ஆயிரத்து 375-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்