சீதளாதேவி மாரியம்மன் கோவில் திருவிழா

திருவாரூர் சீதளாதேவி மாரியம்மன் கோவில் திருவிழா

Update: 2023-05-31 18:45 GMT


திருவாரூர் காகிதக்கார தெருவில் சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடக்கத்தில் பூச்சொரிதல் நிகழ்ச்சி, சிறப்பு அபிஷேகம் நடந்தது. 4-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) பால் காவடி மற்றும் அபிஷேகம் நடக்கிறது. 5-ந் தேதி(திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. 6-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை தீச்சட்டி ஊர்வலம் நடக்கிறது. 7-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 8-ந் தேதி விடையாற்றி விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்