ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது

நெல்லையில் ரேஷன் அரிசி கடத்தியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-23 20:31 GMT

நெல்லை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி தலைமையில் பல்வேறு இடங்களில் தொடர் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நெல்லை அருகே காரில் ரேஷன் அரிசி கடத்தி வந்ததாக சங்கர்நகரை சேர்ந்த ரகுபதி (வயது21), இசக்கிமுத்து (21) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கார் மற்றும் 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்