அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.;

Update:2022-10-03 01:05 IST

கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு நவராத்திரி 7-ம் நாளை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.இதேபோல் நன்செய் புகழூர், குந்தாணிபாளையம் நத்தமேடு, புன்னம் பகுதியிலுள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்