நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்...! தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பு

பயணிகளின் கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக வரும் 30-ந்தேதி நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது;

Update:2023-07-28 22:48 IST

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயணிகளின் கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக வரும் 30-ந்தேதி நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.06004) வரும் 30-ந்தேதி மதியம் 3.40 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு அடுத்தநாள் காலை 6.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்