புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது

Update: 2023-10-26 18:45 GMT

திருப்புவனத்தில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான ஆளுகைக்கு உட்பட்ட புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற சமயப்புலவர்களால் பாடப்பெற்ற புண்ணிய தலமாகும். சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 36-வது திருவிளையாடல் நடைபெற்றது இக்கோவிலின் சிறப்பு. இக்கோவிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி கோவிலின் கொடிமரம் அருகே உள்ள நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பிறகு சுவாமி, அம்பாள் கோவிலின் உள் ஆடி வீதியில் வலம் வந்து நந்திக்கு காட்சியளித்தனர். சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கோவில் சூப்பிரண்டு வேலுச்சாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்