சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு

திண்டுக்கல் பாரதிபுரம் சீரடி சாய்பாபா கோவிலில் சாய்பாபாவுக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

Update: 2023-08-10 20:15 GMT

திண்டுக்கல் பாரதிபுரம் சீரடி சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமைதோறும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. அதன்படி நேற்று சாய்பாபாவுக்கு பன்னீர், பால், இளநீர், விபூதி உள்ளிட்டவையால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாய்பாபாவுக்கு பக்தர்கள் விபூதி அபிஷேகம் செய்தனர். மேலும் சிறப்பு தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் பங்கேற்று பஜனை பாடல்களை பாடினர். சிறப்பு வழிபாட்டையொட்டி கோவிலில் 3 வேளையும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாய்பாபாவை வழிபாடு செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி முருகன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்