விளையாட்டு விழா

காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை கல்லூரியில் 8-ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

Update: 2022-05-22 21:08 GMT

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை கல்லூரியில் 8-ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. கோவிலூர் ஆதீனம் சீர்வளர்சீர் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் ஆசியுரை வழங்கி விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் மாணிக்கவாசகம் வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் ரமேஷ் ஆண்டறிக்கை வாசித்தார். காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். முடிவில் கல்லூரி துணை முதல்வர் சீதாலட்சுமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்