புனித ஆக்னேஸ் அன்னை ஆலய ஆடம்பர தேர் பவனி

காட்டுமன்னார்கோவிலில் புனித ஆக்னேஸ் அன்னை ஆலய ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-04-18 18:45 GMT

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் உடையார்குடி கோட்டைமேடு ஆர்.சி.தெருவில் புனித ஆக்னேஸ் அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடம்பர தேர் பவனி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்தாண்டிற்கான விழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினந்தோறும் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர் பவனி நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதையாட்டி ஆலயத்தில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆக்னேஸ் அன்னை சொரூபம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆடம்பர தேர்பவனி பங்குத்தந்தை ஸ்டீபன் ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து ஆடம்பர தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது.

கூட்டு திருப்பலி

இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் நேற்று ஆலயத்தில் கூட்டு திருப்பலி நடந்தது. பின்னர் இரவு 8 மணிக்கு கொடி இறக்கமும், அன்னதானமும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர், நாட்டாமைகள், மற்றும் கோட்டைமேடு ஊர் இறை மக்கள் ஆகியோர் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்