மாநில அளவிலான கபடி போட்டி

கந்தர்வகோட்டை அருகே மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

Update: 2022-10-09 18:52 GMT

கந்தர்வகோட்டை அருகே உள்ள அரவம்பட்டி கிராமத்தில் "புரோ" கபடி போட்டி தொடக்க விழாவையொட்டி மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 95 அணிகள் கலந்து கொண்டன. பகல்-இரவாக நடைபெற்ற இந்த போட்டியில் கந்தர்வகோட்டை அணியினரும், சேலம் அணியினரும் இறுதி போட்டியில் மோதினர். இதில், சேலம் அணியினர் முதல் பரிசை தட்டி சென்றனர். கந்தர்வகோட்டை அணியினர் 2-வது இடத்தையும், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அணியினர் 3-வது இடத்தையும், ராஜபாளையம் அணியினர் 4-வது இடத்தையும் பிடித்தனர். பின்னர் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும், ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டன. கபடி போட்டியை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்