விவசாயி வீட்டில் பணம் திருட்டு

திருக்குறுங்குடி அருகே விவசாயி வீட்டில் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.;

Update:2023-06-03 00:58 IST

ஏர்வாடி:

திருக்குறுங்குடி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் சுடலை (வயது 35). விவசாயி. இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பணகுடியில் நடந்த உறவினர் வீட்டு, நிச்சயதார்த்த விழாவிற்கு சென்று விட்டார். பின்னர் மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது, பீரோ திறந்தும், அதிலுள்ள பொருட்கள் சிதறியும் கிடந்துள்ளது. இதனால் பதறிய அவர் பீரோவில் பார்த்த போது அங்கு வைத்திருந்த ரூ 95 ஆயிரம் மாயமாகியிருந்தது. சுடலை வீட்டை பூட்டி விட்டு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அவர் வழக்கமாக வைக்கும் இடத்தில் இருந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்று, பீரோவில் இருந்த பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுபற்றி அவர் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்