மண் சட்டி ஏந்தி விவசாயிகள் போராட்டம்

ராயக்கோட்டை அருகே மண் சட்டி ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-31 18:45 GMT

ராயக்கோட்டை

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய 3 ஊராட்சிகளில் 3,500 ஏக்கர் விவசாய நிலங்களை சிப்காட்டிற்கு கையகப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உத்தனப்பள்ளியில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று 27-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் சிலர் பிச்சைக்காரர்கள் போல் வேடமணிந்து கையில் மண் சட்டி ஏந்தி போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது எங்களை கருணை கொலை செய்ய ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கூறி உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் சசிக்குமார் ஆகியோரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்