மின்சாரம் தாக்கி, 10-ம் வகுப்பு மாணவன் சாவு

ஓடாத தண்ணீர் மோட்டாரை இயக்க விபரீதமாக முயற்சி மேற்கொண்ட 10-ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2022-11-25 18:45 GMT

திருப்பத்தூர், 

ஓடாத தண்ணீர் மோட்டாரை இயக்க விபரீதமாக முயற்சி மேற்கொண்ட 10-ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

மின்சாரம் தாக்கியது

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மகிபாலன்பட்டி ஊராட்சியில் சாலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி காஞ்சனா. இவர்களுடைய மகன் ரமேஷ்ஓடாத தண்ணீர் மோட்டாரை இயக்க விபரீதமாக முயற்சி மேற்கொண்ட 10-ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.வயது 15), மகள் சந்தோேஷி (13). இதில் ரமேஷ், மகிபாலன்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலையில் ரமேஷ், வழக்கம்போல பள்ளிக்கு செல்வதற்கு தயாராகி கொண்டிருந்தார். குளிப்பதற்காக வீட்டில் உள்ள தண்ணீர் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். ஆனால் மோட்டார் ஓடாததால் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மோட்டார் உள்ளே இருந்த மின்விசிறியை தட்டி விபரீதமாக முயற்சித்ததாக கூறப்படுகிறது.. அப்போது எதிர்பாராதவிதமாக ரமேசை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. ரமேஷ் மயங்கி விழுந்தார்.

மாணவன் சாவு

உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, மாணவன் ரமேஷ் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. ரமேஷ் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறியது சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து கண்டவரயான்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்