மாணவி பலாத்காரம்; வாலிபர் கைது

விக்கிரவாண்டி அருகே மாணவி பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-07 16:20 GMT

விக்கிரவாண்டியை அடுத்த வி.பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட மாணவி, ஊனமுற்றோர் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை கொசப்பள்ளத்தை சேர்ந்த உறவினரான சீனு (வயது 26) என்பவர், பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்