ஆபாசபடத்தை காட்டி மாணவி பாலியல் பலாத்காரம்

திண்டிவனம் அருகே ஆபாசபடத்தை காட்டி மாணவி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் லாரி டிரைவர் கைது

Update: 2023-02-06 18:45 GMT

திண்டிவனம்

திண்டிவனம் அருகே உள்ள வெள்ளகுளம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால் மகன் மணிகண்டன்(வயது 29). டிப்பர் லாரி டிரைவரான இவர் பிளஸ்-1 படித்து வரும் 16 வயது மாணவியை அந்த பகுதியில் உள்ள முள் தோப்புக்கு அழைத்து சென்றார். பின்னர் தனது செல்போனில் இருந்த ஆபாச படங்களை அவரிடம் காண்பித்து ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இது குறித்து அந்த மாணவி அவரது தாயிடம் தொிவித்ததன் பேரில் அவர் இதுபற்றி திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்