பச்சிளம் குழந்தை மூச்சு திணறி திடீர் சாவு

திருவண்ணாமலையில் பச்சிளம் குழந்தை மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தது.

Update: 2022-06-23 17:33 GMT

திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலை ஆண்டாள் நகர் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 36). இவர், தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி சத்யாதேவி (33). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் சத்யாதேவி மீண்டும் கர்ப்பமானார்.

இவருக்கு நேற்று முன்தினம் திருவண்ணாமலை முத்துவிநாயகர் கோவில் தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை நேற்று திடீரென உயிரிழந்தது. குழந்தைக்கு பால் கொடுக்கும்போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் குழந்தை இறந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்