பச்சிளம் குழந்தை திடீர் சாவு

பிறந்து 8 நாட்களே ஆன நிலையில் பச்சிளம் குழந்தை திடீரென இறந்தது.

Update: 2023-09-13 21:45 GMT

சிங்காநல்லூர்

கோவை நீலிக்கோணம்பாளையம் ஆர்.கே.நகரை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 29). இவர் மனைவிக்கு கடந்த 8 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அவர் தாய்ப்பால் கொடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று அந்த குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அந்த குழந்தை மயங்கியது. அதை பார்த்து பதறிய தாய், தனது கணவர் தெய்வசிகாமணிக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர் 2 பேரும் சேர்ந்து அந்த குழந்தையை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அந்த குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்